செங்குந்தர் கைக்கோள முதலியார்
⚜️குலத் தோன்றல்⚜️
புகழ்மிக்க 3 சோழ மன்னர்களின் அமைச்சர், இராஜகுரு மற்றும் அவைப்புலவர்( விக்கிரம சோழன், இரண்டாம் குலோத்துங்க சோழன், இரண்டாம் இராசராச சோழன்)
ஒட்டக்கூத்தர் முதலியார்
ஒட்டக்கூத்தர் என்பவர் 11-12 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். இவர் 3 சோழ மன்னர்களின் அமைச்சராகவும், அவைப் புலவராகவும் இருந்தவர்.
பிறப்பு:
இவர் தமிழ்நாட்டின்சோழ தேசம் பகுதியான நாகப்பட்டினம் மாவட்டத்தில் மணக்குடி என்னும் ஊரில் நவவீரர் வம்சமான செங்குந்தர் கைக்கோளர் முதலியார் மரபில் பிறந்தார். இந்த ஊரில் இன்னமும் ஒட்டக்கூத்தர் நேரடி வம்சத்தை சேர்ந்தவர்கள் நிலக்கிழார்களாக உள்ளனர் மணக்குடி. இன்னமும் மணக்குடி சிவன் தான்தோண்றீஸ்வரர் கோவிலில் ஒட்டக்கூத்தர் சிலையை வைத்து குலதெய்வமாக வழிபடுகின்றனர். இந்த குடும்பத்தில் மூத்த பிள்ளைக்கு ஒர்ரகோதர் என்று பெயர் வைக்கும் வழக்கம் உள்ளது
வாழ்க்கை
ஒட்டக்கூத்தர் முதல் குலோத்துங்க சோழனின் மகன் விக்கிரம சோழனின் (கி.பி.1120 - 1136) அவைக்களப்புலவராக திகழ்ந்தார். விக்கிரம சோழனின் மகன் 2-ம் குலோத்துங்க சோழனுக்கும் (கி.பி. 1136 - 1150), அவரின் மகன் 2-ம் ராஜராஜனுக்கும் (கி.பி.1150 - 1163) அவைக்களப்புலவராகவும், தமிழ் ஆசிரியராகவும் திகழ்ந்தார் ஒட்டக்கூத்தர். மூன்று சோழ மன்னர்களுக்கு தொடர்ந்து அவைக்களப் புலவராக திகழ்ந்த பெருமை ஒட்டக்கூத்தரையே சாரும்.
இவருக்குப் பல பட்டங்கள் இருந்தன. அவற்றுள் கவிச்சக்கரவர்த்தி, கவிராட்சதன் என்பன குறிப்பிடத்தக்கன.
நளவெண்பா இயற்றிய புகழேந்திப் புலவர் இவர் காலத்தில் வாழ்ந்தவர். காஞ்சிபுரத்தில் இருந்துகொண்டு அக்காலத்தில் ஆட்சி புரிந்துவந்த காங்கேயன் என்பவன் இவரைப் பேணிய வள்ளல்.
குலோத்துங்கன் போரைச் சிறப்பித்துப் பாடிய இவரது பாடல்கள் தனிப்பாடல் திரட்டில் உள்ளன.
இவர் இயற்றிய குலோத்துங்கசோழன் பிள்ளைத்தமிழ் என்ற சைவச்சிற்றிலக்கிய நூலே தமிழில் தோன்றிய முதல் பிள்ளைத்தமிழ் நூலாகும். பூந்தோட்டம் ஊரில் சரஸ்வதி கோயிலை ஒட்டக்கூத்தர் காட்டினார், இன்றுவரை தமிழ்நாட்டில் உள்ள ஒரே சரஸ்வதி கோவில் இதுவே ஆகும், அதனால் பூந்தோட்டம் அவரது பெயராலேயே கூத்தனூர் என்று பெயர் பெற்றதாக கூறப்படுகிறது.
ஒட்டக்கூத்தர் கவிராட்சசன், காளக்கவி, கௌடப்புலவர் போன்றப் பட்டங்களைப் பெற்றவராவர். இவர் தந்தையார் சிவசங்கர பூபதி முதலியார், தாயார் வண்டமர் பூங்குழலி ஆவார். ஒட்டக்கூத்தர் முதலில் கூத்தர் என்றே அழைக்கப்பட்டார். இவர் தில்லை நடராசப்பெருமான் மீது மிகுந்த பக்திகொண்டவர். திருமுருகப்பெருமானுக்கு உடன் தோன்றல்களாக வந்த நவவீரர் மரபான செங்குந்தர் குடியில் பிறந்தார். அக்குடியினர் மிக்க தமிழ்பற்றும் புலமையும் சைவ ஒழுக்கமும் உடையவராவர். ஒட்டக்கூத்தர் தமிழ் பற்றினால் புலமையில் கரை கண்டவர். தமிழ்ப்புலவர் என்று கூறிக்கொண்டு, தமிழைப் பிழையாக உரைத்தால் அவரைச் சிறையில் அடைத்து விடுவார். ஒரு குறிப்பிட்ட நாட்களுக்குப் பிறகு சிறையில் அடைக்கப்பட்ட நபருக்குப் பிழைக்க ஒரே ஒரு வாய்ப்பு கொடுப்பார். அதாவது ஒட்டக்கூத்தர் கேட்கும் கேள்விக்கு சரியான பதிலைத் தந்தால் சிறையிலிருந்து விடுவிக்கப்படுவார். தவறானப் பதிலைக் கூறினால் தலையை வெட்டிவிடுவார் என செவி வழிச் செய்தி உண்டு.
அபிதான சிந்தாமணி, "செங்குத்தர் மரபிற் பிறந்து கூத்தர் என்னும் பெயருடன் வளர்ந்து இவரை காஞ்சிபுரம் சிற்றரசர் செங்குந்தர் குல காங்கேய முதலியார் எனும் உபகாரி ஆதரித்துப் போற்றிக் கல்வி வல்லவராக்கிச் கவுடப்புலவன் கவிராசசன் எனப் பெயரிட்டனர்” எனக் குறிப்பிடுகிறது. ஒட்டக்கூத்தரின் பிறப்பு, இளமைப்பருவம் பற்றிய செவிவழிச் செய்திகள், கதைகள், இலக்கிய வரலாற்றில் இடம் பெற்றுள்ளன.
கூத்தர் தம் நூலில் பைரவர் வணக்கம் பாடியிருத்தல், பைரவக் கடவுள் சீழ்காழித் தலத்தில் எழுந்தருளியிருத்தல், சீர்காழியில் கூத்தருக்குத் திருவிழாக்கள் இன்றும் எடுக்கப்படுதல், கூத்தர் இயற்றியுள்ள நூல்களின் ஏட்டுச் சுவடிகள் சீர்காழி மடத்திலிருந்தே முதன்முதலாகக் கண்டெடுத்தல்.
தமிழ்நாட்டு வரலாற்றில் பன்னிரண்டாம் நூற்றாண்டு சோழப் பேரரசு நிலைபெற்று நிலவிய காலமாகும். 'கி.பி.12-ஆம் நூற்றாண்டில் தான் ஒட்டக்கூத்தர். கூத்தர் என்பது நடனமாடும் கடவுளாகிய சிவபெருமானின் பெயர். அவர் ஒரிசா நாட்டோடு பெற்றிருந்த தொடர்பு காரணமாக ஒட்ட என்ற அடையுடன் ஒட்டக்கூத்தர் என்று வழங்கப்பெற்றார்’. அந்த சொல்லை விளக்குவதற்காக வேறு வகையில் காரணம் கற்பிக்கப்பட்டு கதை புனையப்பட்டதும் உண்டு. பிறர் செய்யும் தவறுகளைக் கடுமையாக எடுத்துரைத்துக் கடிபவர் எனக் குறிப்பிடுகிறார். ஒட்டக்கூத்தரின் மூவருலாவும், தக்கயாகப் பரணியும் குலோத்துங்கள் பிள்ளைத்தமிழும் கி.பி.12- ம் நூற்றாண்டினைச் சார்ந்தவை என ச.வே.சு குறிப்பிடுகிறார்.
ஒட்டக்கூத்தர் "கைக்கோளர் என்னும் மரபினைச் சார்ந்தவர். இவர் பிறந்த மரபின் சிறப்பினை இவர் இயற்றிய ஈட்டியெழுபது என்னும் நூலில் புகழ்ந்துரைக்கின்றனர். ஒட்டக்கூத்தரின் மூவருலா மூன்று அரசர்களைத் திருமாலின் பரம்பரையினர் என்று கூறும் இந்நூல் சோழர்களின் வம்சாவழியை விரிவாகக் கூறுகிறது. அதோடு விக்கிரம சோழனைத் தியாக சமுத்திரன் எனப் பாராட்டும். குலோத்துங்கச் சோழன் தில்லையில் செய்த திருப்பணிகளைச் சுட்டும், இவனது மரபு ரகுவம்ச அரசனான திலீபனிலிருந்து தொடங்குவதாகக் கூறுகிறது. இராசராசன் உலா ஒட்டக்கூத்தரின் இறுதிக்காலத்தில் எழுதப்பட்டது. இராசராசனின் மரபு பிரம்மா என்ற கடவுளிலிருந்து தொடங்குவதாக இதில் குறிக்கப்பட்டள்ளது என்கின்றனர் அறிஞர் பெருமக்கள்.
மூன்று சோழ வேந்தர்களின் முழுமையான அன்புக்குரியவராக விளங்கியுள்ளார் என தமிழ் இலக்கிய வரலாறு குறிப்பிடுகிறது. இவ்வாறாக, அனைத்து இலக்கிய வரலாறுகளும் ஒட்டக்கூத்தரின் வரலாற்றினையும் அவரின் படைப்புகளையும் பதிவு செய்கின்றன. ‘ஒட்டக்கூத்தரின் மூவருலாவும் கம்பரின் கம்பராமாயணமும் சோழர் காலத்து இலக்கிய வானில் ஒளிமிக்க விண்மீன்களாயின்” எனவும் வரலாற்று அறிஞர் என் சுப்பிரமணியம் "இரண்டாம் குலோத்துங்கச் சோழன் காலத்தை தமிழலக்கியத்தின் வெள்ளிக்காலம்” என்றும் குறிப்பிட்டுள்ளனர். இது சோழர்களின் காலம் முழுமைக்கும் பொருந்தும். ஏனெனில் சோழர்களின் அவையில் பெரும்புலவலர்கள் இருந்து தமிழுக்குப் பெரும் தொண்டாற்றினர் என்பதற்குச் சான்றாகும். சோழ மன்னனின் ஆட்சி காலத்துக்கே பெருமையையும் புகழையும் ஈட்டித் தந்தவர்களில் ஒட்டக்கூத்தரும் ஒருவராவர்.
பெயர்ப் பொருள்
கூத்தர் முதலியார் என்பதுதான் இவரது இயற்பெயர். இவர் 'ஒட்டம்' (பந்தயம்) வைத்துப் இலக்கியம் பாடுவதில் வல்லவர் என்பதால் ஒட்டக்கூத்தர் என்று வழங்கப்பட்டார்.
இயற்றிய நூல்கள்:
மூவர் உலா
தக்கயாகப் பரணி
கம்பராமாயண்த்தில் உத்தரகாண்டம்
குலேத்துங்கன் பிள்ளைத்தமிழ்
கலிங்கப்பரணி
காங்கேயன் நாலாயிரக் கோவை
எதிர் நூல்
ஈட்டியெழுபது
அரும்பைத் தொள்ளாயிரம்
எழுப்பெழுபது
எழுப்பெழுபது
கண்டன் கோவை
கண்டன் அலங்காரம்
தில்லை உலா.
ஈட்டி எழுபது உருவான வரலாறு குறிப்பு:
செங்குந்த கைக்கோள முதலியார் மரபினர்கள் தங்களின் வரலாற்றை பாடல்களை இயற்றி தர ஒட்டக்கூத்தரிடம் வேண்டுகோள் விடுத்தனர். ஆனால் ஒட்டக்கூத்தர் அவர்கள் வரலாற்றை எழுத மறுத்தார்.
மீண்டும் மீண்டும் பலமுறை ஒட்டக்கூத்தர் இடமும் மரபினர் தங்கள் வரலாற்றை எழுதி தருமாறு வற்புறுத்தினர். பிறகு ஒட்டக்கூத்தரும் சரி எழுதித்தருகிறேன் ஆனால் இதற்கு காணிக்கையாக எனக்கு 1008 செங்குந்த கைக்கோளர் ஆண்மகனின் தலை காணிக்கையாக வேண்டும் என்றார். செங்குந்தர் கைக்கோளர் மரபினரும் சிறிதும் கவலைப்படாமல் 72 செங்குந்தர் நாட்டில் வாழும் செங்குந்தர் கைகோளர் குடும்பத்தில் உள்ள மூத்த மகனின் தலையை வெட்டி ஒட்டக்கூத்தருக்கு காணிக்கையாக தரவேண்டுமென்று செங்குந்தர் நாட்டாண்மை உத்தரவிட்டார். 1008 செங்குந்த கைக்கோளர் தலைகள் பெற்ற பின்பே ஒட்டக்கூத்தர் ஈட்டி எழுபது இன்னும் செங்குந்தர் கைக்கோள முதலியார் களின் வரலாற்றை சொல்லும் நூலை எழுதி தந்தார். அப்போது காரைக்கால்/சென்னிமலை தட்டயநாடு/ திருமால்பூர் பகுதியை சேர்ந்த செங்குந்த மரபினர்கள் தலையை அறுக்க மறுத்து விட்டதால் அவர்களை அந்த சமூகத்தை விட்டு தள்ளி வைத்தனர் இன்று அவர்களை தலை கோடா முதலியார் என்று அழைக்கப்படுகிறார்கள் இவர்களுடன் மற்ற பகுதியில் வாழும் செங்குந்தர் கைக்கோள முதலியார் களிடம் பெண் கொடுத்தால் வாங்கல் இல்லை.
ஒட்டக்கூத்தர் பற்றிய நூல்கள்
புலவர் பேரரசர் ஒட்டக்கூத்தர்: புலவர் பி.மா.சோமசுந்தரம், சேக்கிழார் பதிப்பகம், 1987. பக்.1-149
நான் கண்ட ஒட்டக்கூத்தர்: சிறீநிவாச ரங்கசுவாமி, நாம் தமிழர் பதிப்பகம், 2004, ப்க்.1-90.
கவிச்சக்கரவர்த்தி ஒட்டக்கூத்தர்: டாக்டர் சி. சுப்ரமணியன்
சரஸ்வதி கோயில்
கூத்தனூர் சரஸ்வதி கோயிலில் ஒட்டக்கூத்தர் வழிபட்டு கட்டிய அம்பாள் அருள் பெற்றுள்ளார்.
ஒட்டக்கூத்தர் நூல்கள் பற்றிய செய்திகள்
விக்கிரம சோழன் உலா.
உலா என்பது தொண்ணூற்றாறு பிரபந்தங்களில் ஒன்றாகும். நாடாளும்
மன்னவன் பட்டத்துயானைமிசை இவர்ந்து நகர்வலம் வரும் திறமை கண்டு ஏழுவகைப் பருவப் பாவைய எய்தும் மனநிலையினை இயம்பும் பாங்கில், சோழவேந்தனின் முன்னே பெருமையினையும், வீரத் திறனையும் வெற்றிச் சிறப்பினையும், அரசியம் அதிகாரிகளின் பண்பு நலன்களையும் வரலாற்றுக் கண்ணோட்டத்தில் பாரித் துரைக்கும் பாங்கில் கூத்தர்பிரான் உலாவினைப் பாடியுள்ளார்.
விக்கிரம சோழன் சிறந்த சிவநேசர் செல்வன் என்பதை,
"மறைக்கொழுந்தை வெள்ளி மலை கொழுந்தை மோகப்
பிறைக்கொழுந்தை வைத்த பிரானைக் சுறைக்களத்து
செக்கர்ப் பனிவிசும்பைத் தெய்வத்
தனிச்சுடன
முக்கட் கனியை முடிவணங்கி"
எனவரும் உலாப்பகுதி உணர்த்து கின்றது. இச்சோழன் தில்லைக்கூத் ரின் திருக்கோயிலுக்குத் திருச்சுற்று முதலிய திருப்பணிகள் ஆற்றிய திற னும் கல்வெட்டுக்களினாலும் உறு பெறும். இவ்வுலாவில் இல க்கியச் சுவை மலிந்த பகுதிகள் பல.
அவற்றுள் ஒன்று பெதும்மைப் பெண் ணின் திறம் உரைப்பது :
"மழலை தனது கிளிக்களித்து வாய்ந்த குழலின் இசைகவர்ந்து கொண்டாள் நிழல்விரவு
முன்னர் நகைதனது முல்லை கொளமுத்தின் பின்னர் நகைகொண்ட பெற்றியாள்"
சோழ நாட்டிற் கிடைக்கும் பல்வேறு பொருள்களின் சிறப்பினை
ஏனைக் கலிங்கங்கள் எழனையும்
பொய்க் கொண்ட
தானைத் தியாக சமுத்திரமே..... பாரிற் படுவன பன்மணியும் நின்கடல் நீரிற் படுவன நித்திலமும் - நேரியதின் வெற்பில் வயிரமும் வேத்ததின்
சோணாட்டுப்
பொற்பில் மலிவன பூந்துகிலும்"
எனவரும் கண்ணிகள் எழிலுற எடுத்தியம்பும். கொண்ட இவ்வுலா முற்றும் சுற்றுச் சுவைக்கத்தக்க இலக்கியமாகும்.
கலிங்கப்பரணி
விக்கிரம சோழன் தன் இளமைக் காலத்தில் வேங்கி நாட்டு வேந்தன் தெலுங்க வீமனைப்பொருது வாகை சூடிய பேராற்றலைப் பாராட்டி நம் கவிஞர் கோமான் என்னும் இலக்கியம் இவ்வுண்மையினை, கலிங்கப்பரணி யாத்துள்ளார்.
செருத்தந் தரித்துக் கலிங்கரோடத் தென்தமிழ்த் தெய்வப்பரணி கொண்டு வருத்தந் தவிர்த்துல காண்டபிரான் மைந்தற்கு மைந்தனை வாழ்த்தினவே'"
(தாழிசை, 776)
எனவரும் தக்கயாகப்பரணியும்; "இப்பரணி பாடினார் ஒட்டக்கூத்த ரான கவிச்சக்கரவர்த்திகள். இப்பரணி பாட்டுண்டார் விக்கிரமசோழ தேவர்" எனவரும் பழைய உரைக்குறிப்பும் உணர்த்துகின்றன. அன்றியும்,
வேற்டூர்
விரும்பரணில் வெங்களத்தீ வேட்டுக்
கலிங்கப்
பெரும்பரணி கொண்ட பெருமான்
தரும்புதல்வன்
கொற்றக் குலோத்துங்க சோழன்"
(குலோ. உலா. 28)
"தாணி ஒருகளிகை தாங்கக் கலிங்கப் பரணி புனைந்த பகுதி"
(இராச.உலா. 27)
"பாலகன் வளைந்தெழு கலிங்கமும் விழுங்கப் பகட்டணி துணித்தொரு பெரும்பரணி கொள்ளும் சேவகன்''
(குலோ. பிள்ளைத்தமிழ் 9:3)
எனவரும் கூத்தரின் வாக்கும் நோக்கத் தக்கது. இப்பாணியைச் சேர்ந்ததாகக் கருதப்பெறும் சிலதாழிசைகள் சிலப் பதிகார உரையில் அடியார்க்கு நல்லாரினால் மேற்கோளாக ஆளப் பெற்றுள்ளன. எஞ்சிய பகுதி இது காறும் கிடைத்திலது.
குலோத்துங்க சோழன் உலா
பல இரண்டாம் குலோத்துங்கனைப் பாடற்பொருளாகக் கொண்டது இந் நூல் இவ்வேந்தன் காலத்தில் அமரேதும் இன்றி அமைதி குடி கொண்டதால் ஆக்கப்பணிகள் நடந்தன. இவற்றையெல்லாம் இவ் வுலா நமக்கு உணர்த்துகின்றது. இவ்வரசன் செய்த தில்லைக்கோயில் திருப்பணிகளைப் பல கண்ணிகளில் கவிஞர்கோமான் பொறித்துள்ளார். ஆனந்தக்கூத்தரின் அம்பலத்தினைப் பொன்வேய்ந்து போற்றிய இவ் வேந்தன் சிவகாமக் கோட்டத்தினையும் அமைத்த செய்தியை
ஒருதான்
பிறக்கும் இமயப் பெருங்கடவுட் குன்றம் மறக்கும் படிச்செல்வம் மல்க -சிறக்கும் இருக்காதி எம்மறையும் எவ்வுலகும்
ஈன்றாள்
திருக்காமக் கோட்டம் திகழ்வித்து'
(குலோ.உலா. 54-56)
எனவரும் உலாப்பகுதி உணர்த்து கின்றது. கவிஞர் பெருந்தகையின் கற்பனை வளத்திற்குக் காட்டாக,
ஆடாத தோகை அலராத புண்டரிகம் பாடாத பிள்ளைப் பசுங்கிள்ளை -சூடத் தளிராத சூதம் தழையாத வஞ்சி குளிராத திங்கட் குழவி - அளிகள் இயங்காத தாள்கா இறக்காத தேறல் வயங்காத கற்பக வல்லி"
(124-126)
என்ற பகுதியை இயம்பலாம். பேதைப் பருவத்துப் பெண்ணை வருணிக்கும் இப்பகுதி இக்காலக் கவிதைத்தன்மை பெற்றும் திகழ்தல் காணத்தக்கது.
குலோத்துங்க சோழன் பிள்ளைத்தமிழ்
இரண்டாம் குலோத்துங்கன் தம் ஆசிரியர் கூத்தரைப் போலவே இரு மொழிப் பெரும்புலமை படைத்தவன். இவன் பிறந்து வளர்ந்தகாலமெல்லாம் உடனிருந்து கண்காணித்து ஒம்பிய புலவர் பெருமான் இவன்பேரில் பிள்ளைத் தமிழ் பாடியிருத்தல் முற்றிலும் பொருந்துவதே. இந் நூலினைக் கரந்தைப் புலவர் லவர் திரு. L உலகநாத பிள்ளை 1933-இல் பதிப்பித்துள்ளார். நம்குலச் செம்மலும் முதுபெரும் புலவருமாகிய திருமுறைச் செல்வர் பேராசிரியர் திரு க. வெள்ளை வாரணர் அவர்கள் இந்நூலைப் பற்றிய விரிவான ஆராய்ச்சிக் கட்டுரையினைத் தஞ்சை மாவட்டச் செங்குந்த மகாசன சங்கத்தின் வெள்ளி விழா மலரில் முதலிய பரிசிலர் பலர்க்கும். குலோத்துங்க சோழன் குறையாது வெளியிட்டுள்ளனர். கவிஞர், கலைஞர் கொடுக்கும் கொடைத்திறனை,
**கோடியர் புலவர் விறலியர் பாணர் குலகிரி களும் குறை நிரையத் தேடிய நிதியம் குலோத்துங்க சோழன் உருட்டுக சிறுதேரே"
எனவரும் பிள்ளைத்தமிழ்ப் பாடற்பகு சுட்டுகின்றது.
இரண்டாங் குலோத்துங்கன்பேரி கூத்தர் பெருமான் மேற்குறித்த இந் நூல்களைப் பாடிய சிறப்பினை,
''...பாடிய, வெள்ளைக் கலியுலா மாக யொடு மீண்டும பிள்ளைத் தமிழ்மாலை பெற்றோனும்"
என்று சங்கரசோழன் உலா பாராட்டு கின்றது.
இராசராசசோழன் உலா
இவ்வேந்தன் தன் தந்தை இரண் டாங் குலோத்துங்கனைப் போலவே கலைபயில் தெளிவும் கடவுட் பற்றும் மிக்கவன். பழையாறை நகரைப்பல் வகையாலும் விரிவுபடுத்தி இராசராச புரம் என்றும் புதுப்பெயரிட்டு அதனையே தலைநகராகக் கொண்டு ஆண்டவன். இந்நகரில் இவன் எடுப் பித்த இராசராசேச்சுரம் என்னும் சிற்பக்கவின் மிக்க சிவாலயமும். இக் கோயிலின் கருவறைப்புறச் சுவரில் திருத்தொண்டர் அறுபத்து மூவரின் வரலாறுகளை உயர்த்தும் பாங்கில் அமைந்துள்ள வடிவங்களும் சிறப் பாகக் குறிப்பிடற்குரியவை. மூன்றாங் குலோத்துங்கன் காலத்தில் பெரியபுராணம் தோன்றுவதற்குரிய மதித்தல் சாலும், இவ்வேந்தன் தன் கால்கோளாக இம்மாடக் கோயில் மீது பாடப்பெற்ற உலாவினை உற்று நோக்கிச் சுவை நலம் துய்த்துக் கூத்தரை ஏத்தும் பாங்கில், ஒவ்வொரு கண்ணிக்கும் ஓராயிரம் பொற்பரிசில் தந்து போற்றினான் என்பதை,
....தெள்ளித்தம்
முன்னாயகரிலவன் மூதுலாக்
கண்ணிதொறும்
பொன்னாயிரம் சொரிந்த பூபதியும்"
எனவரும் சங்சுரசோழன் உலா வலியுறுத்துகின்றது. இவ்வுலாவில்,
"கச்சியிற் கற்றளியில் கல்லிற்
கலிங்கத்தில்
கொச்சியில் கோதா விரிக்குளத்தில் - விச்சியில் வல்லூரில் கொல்லா புரத்தில் மணலூரில் நெல்லூரில் புத்தூரில் நெட்டூரிற்
செல்லூரில்
கோட்டாற்றில் கொங்கில் குடக்கூரிற் கொப்பத்தில் வாட்டாற்றில் காம்பிலியின் மண்ணையில் வேட்டுத்
தாணி கவர்ந்து தமிழ்வேந்தர் பாடும் பரணி புனைந்த பகடு (இராச. 262-265
என்று சோழவேந்தனின் களிற்றுப் பெருமை கவி நலம் பெருகப்புனையப் பெற்றுள்ளது. வேந்தன் வெற்றி பெற்ற ஊர்களை அடுக்கிச் சொல்லும் அழகினை என்என்பது!
தக்கயாகப்பரணி
விக்கிரமனுக்குப் பரணி பாடிய கவிஞர் கோமான் தக்கனின் அக்கிர மங்களை அழித்த வீரபத்திரரின் வெற்றிச் சிறப்பினையும் விரித்துப்பாட முற்பட்டார். பரம்பொருளைப்பணி யாதவர் செய்யும் தவமும் அவமாகும் என்பதைத் தக்கன் கதை சுட்டுகின்றது தக்கன் பக்கம் சார்ந்த முனிவர்களின் ஆணவமலத்தை அகற்றும் பொருட்டு இறைவன் எடுத்த பிட்சாடணமூர்த்தத் தினைத் திருமுறைகள் பாடிப்பரவும்.
தக்கன் வேள்வியைத் திருமந்திம்ர விரித்துரைக்கின்றது. திருவாசகத்தில் திருவுந்தியாரில் பல பாடல்கள் தக்கனின் வேள்வியைத் தகர்த்த செய்தியைக் குறித்துள்ளன. எனவே, இக்கதையினைப் பரணியின் கருப் பொருளாகக் கொண்டு சந்தம் குலுங்கும் செந்தமிழ்த் தாழிசைகளில் கவிவளம் மல்கிப் பல்கிச் சிறக்கக் கூத்தர் பாடியுள்ளார். காளிக்குக் கூளி கூறிய பகுதியில்
"பாவியார்சிறு தக்கனாரொரு பக்கமாய பரம்பரன்
தேவியான்முனி வுண்டுபட்டது கேண்மினென்றது செம்புமே" (245)
எனவரும் தாழிசையில் பகைவனைக் கூட இரக்க உணர்ச்சியுடன் சுட்டும் கவிஞரின் மென்மையுள்ளம் புலப் படுகின்றது. இப்பரணி நூலினைப் பயின்றதாலன்றோ அருணந்திசிவனார்,
"அரனடிக் கன்பர் செய்யும் பாவமும்
அறமதாகும்
பரனடிக் கன்பிலாதார் புண்ணியம் வரமுடைத் தக்கன் செய்த மாவேள்வி
பால மாகும்
தீமை யாகி
நரகினிற் பாலன் செய்த பாதகம் நன்மை யாய்த்தே"
எனப் பாடுவாராயினர்!
இப்பரணியின் மற்றுமொரு சிறப்பு திருஞானசம்பந்தப் பிள்ளையின் வரலாற்றினைக் கலை மகள் கொற்றவைகேட்க, எடுத்துரைப்பதாகும். கோயிலைப் பாடியது என்னும்பகுதியில் 169-221 தாழிசைகளில் இடம் பெறும் சம்பந்தரின் வரலாறு சேக்கிழார் பிள்ளைபாதி புராணம் பாதி என்னும் அளவிற்கு முக்கியத்துவம் தந்து திருஞானசம்பந்தரின் வரலாற்றினைப் பாட ஊக்கியது என்று உய்த்துணர லாகும்)
குலோத்துங்கன் கோவை
இக்கோவையும் கூத்தர்பாடியது என்பர். "கோவை உலா அந்தாதிக்கு ஒட்டக்கூத்தன்'' எனத்தனிப் பாடல் காணப்பெறுவதால் இக்கோவை நூலினை நம் ஆசிரியர் பாடியதெனக் கொள்ளுதல் கூடும். இக்கோவையில் 510 பாக்கள் உள்ளன. மதுரைத் தமிழ்ச்சங்கத்தின் ஆராய்ச்சியாளர் திரு. மு. ரா. அருணாசலக்கவிராயர் தாம் வரைந்த அரும்பதவுரையுடன் 1910இல் இந்நூலினைப் பதிப்பித் துள்ளார். இக்கோவைத் தலைவனாகக் குறிக்கப்பெறும் குமார குலோத்துங் கனை மூன்றாங்குலோத்துங்கன் எனக் கருதுவர். அங்ஙனமாயின், நம் கவிஞர் கோமான் இரண்டாம் இராசராசன் மகனாகிய இம் மூன்றாங் குலோத்துங் கன் காலத்தும் இலங்கியவர் என்று எண்ணுதல் வேண்டும். சீலமும் ஒழுக் கமும் கைக்கொண்டு நன்னெறியில் நின்ற கூத்தர் நீண்டகாலம் வாழ்ந்த வர் என்று எண்ணுதல்சாலும். இக்கருத் தினை வலியுறுத்தும் வகையில், முதற் குலோத்துங்கன் மகள் அம்மங்காதேவி மூன்றாங் குலோத்துங்கனின் காலத் திலும் வாழ்ந்ததை எடுத்துரைப்பார். குலோத்துங்க சோழன் கோவையில் சுனை நயப் புரைத்தல் என்னும் துறைக் குரியதாய்,
"கருமேக வண்ணன் குலோத்துங்க
சோழன்கல் யாணிவெற்பில்
திருமேனி நாணும் திருவுருவாய்! செய்ய
வாய்வெளுப்பும்
உருமேல் பசப்பும் விழிமேல் சிவப்பும் உடல்வியர்ப்பும் தருமேல் குடைவேன் அடியேனும் அந்தத்
எனவரும் பாடல் சுவைநலம் மிக்கது.
தடஞ்கனையே
காங்கேயன் நாலாயிரக் கோவை
பெரும்பாலும் கோவை நூல்களில் நானூறு பாடல்களே பாடப்பெறும். எனின், தம் பரந்தபுலமைக்கு ஏற்ப ஐந்நூறும், ஆயிரமும் பாடும் ஆற்றல் கூத்தர்பால் விளங்கிற்று. காங்கேயன் என்னும் புதுவைநகர் வள்ளல்மீது பாடப்பெற்ற நாலாயிரம் பாடல்கள் கொண்ட இந்நூல் தமிழர்தம் கவனக் குறைவால் மறைந்தது போலும்!
அரும்பைத் தொள்ளாயிரம்
முத்தொள்ளாயிரம் போல் இந்நூல் அளவினால் அமைந்திருத்தல் வேண்டும். அரும்பை வள்ளல் ஒருவன் மீது வரலாற்றுணர்வும் கற்பனை யும் கலந்து நம்கவிஞரால் பாடப் பெற்ற இந்நூலும் கிடைத்திலது.
உத்தரகாண்டம் - கம்பராமாயணம்
உத்தம சோழன் காலத்தில் விளங் கிய கம்பர் இராம காதையின் முதலாறு காண்டங்களையுமே பாடினார். அவரால் பாடப்பெறாது எஞ்சிய ஏழாவது பகுதியாகிய உத்தரகாண்டத்தினையும் ஓய்வு நேரத்தில் ஒட்டக்கூத்தர் பாடி நிரப்பினார் போலும், இந்நூல் அண்ணா மலைப் பல்கலைக்கழகத்தில் உரைவிளக் கத்துடன் வெளியிடப்பெற்றுள்ளது.
ஈட்டி எழுபது
நம் குலத்தின் பெருமையினை நானிலம் உணரும் பாங்கில் கூத்தர் பாடியது ஈட்டி எழுபது என்பர். ஈட்டி எழுபது நம்மரபின் படைக்கருவியாகிய
இரட்டைத் தாழ்ப்பாள்” திறக்கப்பட்டது!
P. S. சாம்பசிவம் முதலியார் , அறங்காவலர் குழுத் தலைவர், அருள்மிகு வெள்ளீசுவரர் திருக்கோயில், திரு மயிலை.
"ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு இரட் டைத் தாழ்ப்பாள்" என்ற தொடரை கவிச் சக்கரவர்த்தி ஒட்டக்கூத்தரைத் தாழ்த்திப் பேசுவதற்கே பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் இந்த வாசகம் ஒட்டக் கூத்தருக்குப் பெருமை சேர்ப்ப தாகும் என்பதை உணர்த்தினார் தமிழ றிஞர் டாக்டர் சிலம்பொலி சு. செல் லப்பன் அவர்கள்.
திருமயிலை வெள்ளீசுவரர் திருக் கோயிலில் ஆண்டுதோறும் ஆவணித் திங்களிலே ஒட்டக்கூத்தர் விழா நடை பெறுகின்றது. 12.9.1986 அன்று நடை பெற்ற ஒட்டக்கூத்தர் விழாவில் தமிழக அரசின் தமிழ் வளர்ச்சி இயக்குநராக இருக்கும் டாக்டர் சிலம்பொலி செல்லப் பன் அவர்கள் "ஒட்டக்கூத்தரின் கவிநயம்" என்ற தலைப்பிலே சிறப்பானதோர் சொற்பொ ழிவாற்றினார். காழ்ப்புணர்ச்சி யின் காரணமாக ஒட்டக் கூத்தரைப் பற்றி கூறப்பட்டு வரும் கட்டுக் கதை களையெல்லாம் மறுத்து ஒட்டக்கூத்த
ரின் பெருமைகளைப் புலப்படுத்தினார். ஒட்டக்கூத்தரின் கவிநயங்களைப் புரிந்து கொள்வதற்கு ஒரு தாழ்ப்பாளைத் திறந் தால் மட்டும் போதாது; அவரின் கவி தைகளை ஒரு முறைக்கு இருமுறை படிக்க வேண்டும்; இரண்டாவது தாழ்ப் பாளைத் திறந்தால் தான் கூத்தரின் கவிதைகளினுள்ளே புகமுடியும் என்று கூறினார். "ஓட்டக் கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள்" என்பதற்கு இதுதான் உண்மையான உட்பொருள். இந்தப் பழமொழி ஒட்டக் கூத்தரின் கவிதைகளின் சிறப்பைத்தான் குறிக்கி றதே தவிர கூத்தர் பெருமானை தாழ்த்து வதற்கு அல்ல என்றும் அறுதியிட்டுக் கூறினார். இக்கருத்து புலவரேறு வரத நஞ்சையா பிள்ளை அவர்களால் கூறப் பட்டது என்றும் அவர் குறிப்பிட்டார்.
"இரட்டைத் தாழ்ப்பாளின்" உண் மையான பொருள். பொருள் திறக்கப்பட்டது அன்று!
ஒட்டக்கூத்தர் நூல்களை பற்றிய செய்திகள்
![]() |
| ஒட்டக்கூத்தரின் சிலை |
![]() |
| தஞ்சாவூர் மாவட்டம் தாராசுரத்தில் அமைந்துள்ள ஒட்டக்கூத்தர் ஜீவசமாதி |
| திருச்செங்கோடு ஒட்டக்கூத்தர் அரங்கம் |
![]() |
| ஒட்டக்கூத்தர் உச்சவர் சிலை, கூத்தனூர் |
![]() |
| ஒட்ட கூத்தரின் பேரன் ஒவ்வாத கூத்தனின் கல்வெட்டு |
![]() |
| ஒட்டக்கூத்தரின் கொள்ளு பேரன் கல்வெட்டு |
![]() |
| பாண்டியமண்டலம், சிவகாசி அருகே அம்மையார்பட்டியில் ஒட்டக்கூத்தர் பெயரில் கட்டிடம் |
ஒட்டக்கூத்தரும் மணக்குடி ஊரும்.
1. கவிச்சக்கரவர்த்தி ஒட்டக்கூத்தமுதலியார் பிறந்த மனை மணக்குடியில் கிழக்குத் தெருவில் உள்ளது.
2, கூத்த முதலியார் கைக்கோள மரபினர். மணக்குடியில் தொன்றுதொட்டு வாழ்பவர் யாவரும் பரம்பரையாக வரும் கைக்கோள முதலியார்களேயாவர். அவர்கள் கூத்தரைத் தங்கள் முன்னோருள் ஒருவர் என்று உரிமை யுடன் கூறுகின்றார்கள்.
3. கூத்தர் பிறந்து வாழ்ந்த மனைக்கு இன்றும் " ஓட்டக் கூத்தர் மனை' என்றே ஊரார்கள் சுட்டிக் கூறு கின்றார்கள்.
4. அம்மனையில் ஒட்டக்கூத்தரின் வழிவரும் குடும்பத்தினர் இன்றும் வாழ்ந்து வருகின்றார்கள். அவர்கள் தலைமுறைக்கு ஒரு ஆண் பிள்ளைக்கு ஓட்டக்கூத்தன் என்று பெயரிட்டு வருகின்றார்கள். இம் முறையில் இன்றைய தலைமுறைக்குரிய ஓட்டக்கூத்த முதலியார் வாழ்ந்து வருகின்றார்.
5, இன்றுள்ள ஒட்டக்கூத்த முதலியாரும், ஊரிலுள்ள கைக்கோள முதலியார்களும் கவிச் சக்கரவர்த்தியின் வாழையடி வாழையாகவரும் 'சுற்றமென்றே கூறுகின் றார்கள். தலைமுறைக்கு ஓருவராகப் பெயரிட்டுவரும் ஓட்டக்கூத்தருள் சிலர் புலமையும் தெய்வநலனும் செல்வ வளனும் பெற்றவர்களாகத் திகழ்ந்திருந்த கதைகளை இவர்கள் விரிவா கக் கூறுகின்றனர். இத்தகைய செய்திகளைச் செவிவழிச் செய்தி என்று தள்ளமுடியுமா? மரபுவழிச் செய்தியாக வல்லவோ இருக்கின்றது! மற்றும்,
6. கவிச்சக்கரவர்த்தி கூத்தர் சாமளை என்னும் சக்திவழி பாட்டினர் என்பதை தக்கயாகப் பரணியால் உணர லாகும், மணக்குடியில் சோழர் காலத்தில் உண்டான சக்தி கோயிலே, பழைய மணக்குடியின் வடக்கு எல்லையில் அழிந்து கிடக்கும் பிடாரிகோயிலாகும் கூத்தரால் வழிபாடு செய்யப்பெற்ற தேவி, இன்று கூரைக் 'கொட்டகையுள் தரையில் அமர்ந்திருப்பினும் 'சாமளாதேவி' என்ற பெயருடனேயே இருக்கின்றார்.
7. சாமளாதேவிக்கு ஒட்டக்கூத்தர் புத்தாண்டு நாளில் பெரும்படையல்' என்ற பெயரால் சிறப்பு வழிபாடு நிகழ்த்தியுள்ளார். அவர் வழிவரும் முதலியார்கள் தொடர்ந்து இன்றளவும் அவ்வழிபாட்டினைத் தமிழ்ப் புத்தாண்டு நாளில் நிகழ்த்திவருகின்றார்கள். (கூத்தர் பெருஞ்சோற்றுப் படையலிட்ட இடம், சிதைந்து கிடக்கும் பிடாரியார் கோயிலின் தென்மேற்கு மூலையில், திருக்குளத்தின் கரையில் இன்றும் இருப்பதைக் காணலாகும்.)
8. யாமள சாத்திரத்துள் கூறப்பெறும் சாமளாதேவி வழிபாடு. வடமொழிப் புலமையும் பெற்றிருந்த கூத்தரால் நிகழ்த்தப் பெற்றிருந்ததால், அவரை நன்கு மதித்துப் போற்றிய சோழமன்னரும் தமது ஆட்சியில் சாமளா தேவிக்குப் பல இடங்களில் கோயிலெடுத்துள்ளன ரென்று தெரிகின்றது.
9. பிடாரியார் கோயிலென்றும், சாமளாதேவி கோயி லென்றும் கூறப்பெறும் ஒட்டக்கூத்தர் வழிபட்ட சக்தி கோயில் சோழர் காலத்தில் செங்கல் திருப்பணியாகவே அமைந்திருக்கின்றது. செங்கற்கள், அளவில் பெரிய தாகவும், நிறமும் திண்மையும் பொருந்தியதாகவும் உள்ளன. கற்களைப்பற்றிப் பழம்பொருள் ஆராய்ச்சிக் கண்ணோட்டத்துடன் கூறும்போது, இக்கோயில் கி. பி. பன்னிரண்டாம் நூற்றாண்டின் முற்பகுதியில் தோன்றி யிருக்கவேண்டுமென்பது திட்டமாகத் தெரிகின்றது.
ஒட்டக்கூத்தர் குருபூஜை













